சிறுமி உயிரிழப்பு விவகாரம் ரிஷாதும் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்!
டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த விடயத்தை நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி உயிரிழந்தமை மற்றும் சிறுமியை பணிக்கமர்த்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது