இறந்த சடலத்துக்கு 2 நாள் சிகிச்சை அளித்து பணம் பறித்த வைத்தியர் கைது!
சினிமா படங்களில் வருவது போன்று உயிரிழந்த பெண்ணிற்கு 2 நாட்களாக சிகிச்சை அளித்து பணம் பெற்ற வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியா, மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் இஸ்லாம்புர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அங்குள்ள ஆதார் ஹெல்த்கேர் என்ற வைத்தியசாலையில் உள்ள யோகேஷ் என்ற வைத்தியரே இவ்வாறு இறந்த உடலுக்கு போலியாக மருத்துவம் செய்து பணம் பெற்றுள்ளார். இவரையே போலிஸார் கைது செய்துள்ளனர்.