எரிபொருள் விலை எப்போது குறையும்?
எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தவுடன், அதன் நிவாரணத்தை உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை, மக்களின் உணர்வறிந்த அரசாங்கம் என்ற ரீதியில் நன்கு அறிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.