மீண்டும் ரணில் சஜித் கூட்டணி?
ஐக்கிய தேசியக்கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
சஜித் பிரேமதாச மீண்டும் தமது சொந்த வீட்டுக்கு திரும்பி வந்து தற்போதைய நெருக்கடியிலிருந்து தேசத்தை காப்பாற்ற தங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக ரங்கே பண்டார தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பல உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளதாக ருவான் விஜேவர்தன இதன்போது தெரிவித்தார்.