எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பசில்?

எதிர்வரும் 8 ஆம் திகதி பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வருவார் என்று வெளியுறவு அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி ,பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வந்து நாட்டின் பொருளாதாரத்தை கையகப்படுத்தியவுடன் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவினை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தவுடன், பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்க வருவது அரசாங்கத்திற்கும், கட்சிக்கும், மக்களுக்கும் பெரும் உற்சாகமாய் அமையும் என்ற அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *