அடுத்த 8 வாரங்களில் நாட்டை ஆட்டிப்படைக்கும் டெல்டா!

எதிர்வரும் 8 வாரங்களில் இலங்கையின் பிரதான கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் காணப்படக்கூடும் என கொவிட் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவிக்கின்றார்.

இதன்படி ,பொதுமக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில், எதிர்வரும் வாரங்கள் மிகவும் அபாயகரமான வாரங்களாக மாறக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

மேலும் ,உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில், அடுத்த 8 முதல் 10 வாரங்களில் நாட்டின் பிரதான வைரஸாக டெல்டா வைரஸ் இருக்கும் என ஆய்வுகளை நடத்தும் விசேட வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *