பொலிஸ் உத்தியோகத்தர்களை தண்டிக்கும் அரசாங்கம் கொலைகாரர்களிற்கு வெகுமதி வழங்குகின்றது!

பொலிஸ்உத்தியோகத்தர்களை தண்டிக்கும் அரசாங்கம் கொலைகாரர்களிற்கு
வெகுமதி வழங்குகின்றது என முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

சிறுவர் கொலையாளி சுனில்ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கிய நாள் முதல் அரசாங்கம்; அதிகாரம் உள்ளவர்கள் அல்லது அரசியல் தொடர்புடையவர்களை விசாரணை செய்யும் துணிச்சல் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை தண்டிக்கும் போக்கை வெளிப்படுத்தி வருகின்ற அதேவேளை கொலைகாரர்களிற்கு வெகுமதி
வழங்கும் போக்கை கடைப்பிடிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொலையாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட துமிந்தசில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புஇந்த அரசாங்கத்தை நம்பியவர்களிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என முன்னாள் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொலைகாரர்களை பாதுகாக்கும் அவற்றை விசாரணை செய்பவர்களை தண்டிக்கும் இந்த அரசாங்கத்தின் போக்கை அறிந்தவர்களிற்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *