அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் 4 வயது சிறுமி சாதனை!
அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் பிரதேச, மீராநகர் பகுதியைச் சேர்ந்த “றனீஸ் பாத்திமா அனா” என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு ஆசிய சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார்.
இவர் சாதனை சுட்டி என்றழைக்கப்படும் “க்ரேன்ட் மாஸ்டர்” மகுடத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம் மாணவி வெறும் 30 செக்கன்களில் 53 பழவகைகளுடைய பெயர்களை மிக வேகமாக சொல்லும் ஆற்றல் உள்ள முதல் இலங்கையர் எனும் பெயரை தடம் பதித்துள்ளார்.