எரிபொருள் விலையேற்றம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட விசேட அறிக்கை!

உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே, எரிபொருளை விலை அதிகரிப்புக்கான காரணம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள சர்ச்சைக்கு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்தமையும், எரிபொருள் விலை அதிகரிக்க ஒரு காரணம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *