கத்தோலிக்கரொருவரின் சடலம் ஓட்டமாவடியில் நல்லடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்த கத்தோலிக்கர் ஒருவரின் சடலம் ஒட்டமாவடி, மஜ்மா நகரில் இன்று (13) சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

ஜாஎல பிரதேசத்தினைச் சேர்ந்த 60 வயதுடைய இந்துமதி பெரேராவின் சடலமே அடக்கப்பட்டது.

இவர் கடந்த 08ஆம் திகதி ஹோமகம வைத்தியசாலையில் மரணமானமை குறிப்பிட்டத்தக்கது. இதற்கமைய கத்தோலிக்கர் ஒருவரின் சடலம் முதன் முதலாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *