இன்று 735 பேருக்கு கொரோனா 4 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் மேலும் 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 735 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணி 63,849 ஆக அதிகரித்துள்ளது.