மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா குழு அட்டூழியம்! – ஒருவர் படுகாயம்

யாழ். மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டுக்குள் புகுந்து நேற்றுச் சனிக்கிழமை நண்பகல் இந்த அட்டூழியத்தை ஆவா குழு நடத்தியது.

3 மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகளை மறைத்தும் முகங்களை மூடியும் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியது.

ஆவா குழுவிலிருந்து பிரிந்த தனு ரொக் என்பவரது நண்பரின் வீட்டுக்குள்ளேயே ஆவா குழு புகுந்து தாக்குதலை நடத்தியது. அந்த வீட்டுக்குள் புகுந்து கடந்த வருடம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இது இரண்டாவது தாக்குதலாகும்.

சம்பவத்தில் அந்த வீட்டுக்கு அருகாமையிலுள்ள வீட்டில் மேசன் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர் கை, காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *