கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆசிரியரும், வாங்கிய மாணவனும் கைது!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவரை புபுரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவரிடமிருந்து 520 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளையும் ஆசிரியரிடம் கொள்வனவு செய்த 17 வயது சிறுவனிடமிருந்து 470 மில்லிகிராம் கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்நிலையில் ஆஜர் படுத்தியபோது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கஞ்சா கொள்வவுசெய்த 17 சிறுவனை சமூக சேவையில் ஈடு படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
புபுரஸ்ஸ தோட்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவந்த மேற்குறிப்பிட்ட ஆசிரியர் பகுதி நேர வியாபாரமாக கஞ்சாவினை விற்பனை செய்து வந்ததாக தெரியவருகிறது.
இந் நிலையில் புபுரஸ்ஸ பொலிஸாருக்கு கடந்த வியாழக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவிலுக்கமைய மேற்குறிப்பிட்ட சிறுவனை பரிசோதனைக்குட்படுத்திய பொழுது அவனிடமிருந்து 470 மில்லிகிராம் கஞ்சாவினை கைப்பறிள்ளனர்.