மேலும் இரண்டு பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு!

நாட்டின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *