இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது!

நேற்றைய தினத்தில் நாட்டில் 843 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து 03 பேர் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58,427 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 49,684 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 280 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

8,464 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *