பதவியேற்றகையோடு ரஸ்யாவுக்கு தூதுவிட்டார் மஹிந்த!

இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், ரஸ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக, நேற்று மொஸ்கோவில், ரஸ்ய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.

தெற்காசிய மற்றும் ஈரான் விவகாரங்களைக் கவனிக்கும், ரஸ்ய வெளிவிவகார அமைச்சின், இரண்டாவது ஆசிய டிவிசனின், அதிகாரிகளுக்கே அவர் இலங்கை நிலவரங்களை விளக்கியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலுக்கு அமையவே, கொழும்பில் இருந்து பரிமாறப்பட்ட தகவல்களை அவர் ரஸ்ய அதிகாரிகளிடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சரத் அமுனுகமவின் வாழ்த்துக்களை அவர் ரஸ்ய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதுடன், அவரது பின்புலம் குறித்தும் ரஸ்ய அதிகாரிகளுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு சீனா மாத்திரமே இதுவரை வாழ்த்துக் கூறியுள்ளது. ஏனைய நாடுகள் அவரை இன்னமும் அங்கீகரிக்காத நிலையில், மகிந்த ராஜபக்ச தனது நெடுநாள் கூட்டாளிகளில் ஒன்றான ர~;யாவுக்கு தூது அனுப்பியுள்ளார்.

கலாநிதி தயான் ஜெயதிலக மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக இருந்தவர் என்பதுடன், அண்மையில் ஜனாதிபதி மைத்திரியால் ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *