ஜனாஸாக்களை அகற்ற வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை!
கண்டி தேசிய வைத்தியசாலையில் நீதிமன்ற வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், இன்று (03) கடமையில் இருந்து விலகி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவரின் ஜனாஸா, கடந்த சில வாரங்களாக குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளமை சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து, உடனடியாக அதனை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.