கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். எனினும், 2ஆவது அலை ஏற்பட்ட பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது