இலங்கையில் மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட ஆட்டோ!

ராஜிகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் வாகன பாகங்களை திருடியவர்களை கையுமெய்யுமாகப் பிடித்த பிரதேச மக்கள், திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட முச்சக்கர வண்டியைத் மின்கம்பத்தில் தொங்கவிட்டதாக தெரியவருகிறது.

காட்சிக்காக முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மக்களின் வாகனப் பாகங்கள் மற்றும் எரிபொருளைத் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட குறித்த முச்சக்கர வண்டியே, மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *