கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்து போன நடிகை சித்ரா!
தொகுப்பாளியாக தனது ஓட்டத்தை ஆரம்பித்து பின்பு நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்ற சித்ராவின் கடைசி ஆசை குறித்து தகவல் தீயாய் பரவி வருகின்றது.
இவர் சினிமாவில் பெரிய அளவில் ஜெயிப்பார் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் பலர். ஆனால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றி உலகத்தை விட்டே சென்றுவிட்டார் சித்ரா.
அவரது மரணம் இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருமே கண்ணீருடன் தான் உள்ளார்கள். இந்த நேரத்தில் தான் சித்ராவின் பழைய பேட்டி ஒன்று வைரலாகிறது.
அதில் நான் இதுவரை விஜய்யை ஏன் சந்திக்கவில்லை என்றால் அவரை எனது திருமணத்திற்கு அழைக்கும் போது தான் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன் என கூறியுள்ளார்.