அரசாங்கத்துக்கு எதிராக தீப்பந்தமேந்தி சஜித் அணி போராட்டம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இன்று தீப்பந்தமேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *