கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் நீதிபதிகளாகச் சத்தியப்பிரமாணம்!
மதராஸ் உயர் நீதிமன்றத்தில் கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் நீதிபதிகளாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருக்கின்றனர். முரளி சங்கர் குப்பராஜு, தமிழ்ச்செல்வி வளயபாளயம் ஆகிய இருவருமே அவர்கள்.
பஞ்சாப் நீதிமன்றத்தில் கடந்த நவம்பரில் ஒரே நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அர்ச்சனா பூரி, விவேக் பூரி ஆகிய தம்பதிகள் தவிர இந்த இருவரும் தான் இந்தியச் சரித்திரத்தில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாகிய தம்பதிகள் என்று குறிப்பிடப்படுகிறது.