காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சலுகைக் காலம்!

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக, மேலும் 3 மாதங்கள் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தாலும் பிரதேச செயலகம் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை உள்ளிட்ட சேவை வசதிகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *