பசில் ராஜபக்ச மற்றும் ரஹுப் ஹக்கீம் ஒரே குழுவில்!

தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முடிவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) காலை பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

21 செப்டம்பர் 2021 அன்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த பாராளுமன்றத் தெரிவுக் குழு, தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பு மற்றும் விதிகளை திருத்த நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு இதுவரை பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அதன் இறுதி அறிக்கை வரும் நவம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சபைத் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *