இந்தியா – பாகிஸ்தான் எல்லை மோதல்: படையினர், பொதுமக்கள் உள்பட இரு தரப்பிலும் 14 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென மூண்ட சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த படையினர், பொதுமக்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் பக்கத்தில் மூன்று படையினரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பு கூறுகிறது.

தங்கள் பக்கத்தில் நான்கு படையினரும், நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தை மீறியதாக இரு நாட்டுப் படையினரும் ஒரு தரப்பை மற்றவர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தியாவில் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் இத்தகைய மோதல் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை மீறி கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகே உள்ள குரெஜ், உரி ஆகிய செக்டார்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக பாகிஸ்தானும் கூறியுள்ளது.

நீலம், ஜீலம் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் தூண்டுதல் ஏதும் இல்லாமலே இந்தியப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக முஜஃபார்பாத்தில் உள்ள மாநில பேரிடர் பாதுகாப்பு முகமை தமது தினசரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

இந்தியாவில் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் இத்தகைய மோதல் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை மீறி கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகே உள்ள குரெஜ், உரி ஆகிய செக்டார்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக பாகிஸ்தானும் கூறியுள்ளது.

நீலம், ஜீலம் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் தூண்டுதல் ஏதும் இல்லாமலே இந்தியப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக முஜஃபார்பாத்தில் உள்ள மாநில பேரிடர் பாதுகாப்பு முகமை தமது தினசரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *