ஒரு வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், 35 சதவிகிதம் அளவிற்கு அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிகப்படியான பாதிப்புகளை உறுதி செய்வதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.