இலங்கையில் நேற்று 335 பேருக்கு கொரோனா!
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக நேற்று (28) 335 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5,731 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 9,205 ஆகும்.