மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாட்டை முடக்குவது அவசியம்!
மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். .
இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், கொவிட்-19க்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்