இலங்கையில் நேற்று கொரோனாவால் 16 ஆவது மரணம் பதிவானது!

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி நேற்று மரணமாகியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, கொழும்பு 02 ஐச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நேற்று (25) அதிகாலையளவில் குறித்த நபர் மரணமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், இரத்தத்தில் கிருமி நுழைந்தமை தொடர்பான சிக்கல் நிலை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை (23), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிக்கல் நிலைமை காரணமாகவே அவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *