இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா மிகவும் வீரியம் கூடியது!
முன்பு இலங்கையில் பரவிய வைரஸை விட தற்போது பரவிவரும் வைரஸ் மிகவும் தொற்று தன்மை அதிகமாக இருப்பதால், மினுவாங்கோடா கோவிட் -19 நோயாளிகளிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவது மிக அதிகம் என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் மக்கள் மிகவும் அவதானமாகவும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தில் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.