இலங்கையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களில் 13 பேருக்கே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 118 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் பலியாகியுள்ளனர்.