இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று (22) காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜக்ஷவினால் அவருக்கான நியமனக்கடிதம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *