நேற்று இரவு நடைபெற்ற சவூதி அரேபிய தேசிய தின நிகழ்வில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்துகொண்டார்.சவூதி தூதுவரின் அழைப்பின் பேரில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.