இந்தியாவில் ஒரே நாளில் 64399 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.53 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை  14.27 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர்  கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கையானது 21,53,010 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,28,747 பேர் சிகிச்சை பெற்று வரும்  நிலையில்,14,80,884 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 861 உயிரிழப்புக்கள் பதிவாகி  உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 43,379 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்  குணமடைந்தோர் விகிதம் 68.79% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.01% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை  பெறுபவர்கள் விகிதம் 29.20% ஆக குறைந்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *