இலங்கையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு!
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு!
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் (30.07.2020) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளது.
இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூழில் கிடைக்கபெற்றுள்ளது.
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவர்கள் என தெரிவித்தார்.