ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா !
ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதியானதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். மேலும் 3.5 கோடி தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ‘ ஈரானில் இதுவரை 2.6 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 14,000 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்.’ என்று தெரிவித்தார்.இதுவரை 2,69,440 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அதிபர் அதை விட பல மடங்கான எண்ணிக்கையை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.