உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகளுக்கு கொரோனா!
ஹிந்தி திரையுலக சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் நால்வருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அமிதாப் பச்சன், அவரது மகன் அபிசேக் பச்சனை தொடர்ந்து, மருகளான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று உறுதியாகவில்லை