பொதுஜன பெரமுனவின் பிரச்சாரக்கூட்டங்கள் இடைநிறுத்தம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கும் மக்கள் சந்திப்புகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பொதுக்கூட்டங்கள் மற்றும் சிறிய ஒன்றுகூடல்களையும் மட்டுப்படுத்துமாறும் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் செயலாளர் பஸில் ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிறிய ஒன்றுகூடல்களை நடத்தப்படுமாயின் அதில் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *