பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருக்கு கொரோனா!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரபி மோர்டாசாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை இன்று உறுதி செய்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் டாக்காவில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை (13) பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.