இலங்கையில் ஜும்ஆ உட்பட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி!
வழமையான ஐவேளை மற்றும் ஜும்ஆ கூட்டுத் தொழுகைகள் உள்ளிட்ட விசேட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதியை அடுத்து, இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த அனுமதி வழங்கப்படுவதாக, இலங்கை வக்ப் சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
நிகாஹ் (திருமணம்) மஜ்லிஸ் உள்ளிட்ட கூட்டு நிகழ்வுகளையும் சமூக இடைவெளி பேணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.