மங்கள சஜித்தின் கட்சியிலிருந்து விலகியதன் பின்புறத்தில் ரணில்!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய அணியிலிருந்து முன்னாள் அமைச்சர் விலகியுள்ளார். இதற்கான காய்நகர்த்தலை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கவின் வேட்பாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவை சஜித் அணியிலிருந்து விலக வைப்பதற்கான காய்நகர்த்தல் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் சாணக்கியத்தின் மூலமே மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தெற்கில் அவர்களுக்கான வாக்கு பாரிய வீழ்ச்சிக்கண்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பலர் சஜித் அணியிலிருந்து விலகுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *