ஒரு ஊழியரால் 533 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
கானாவின் டெமா நகரில் உள்ள மீன் பதனீட்டு ஆலை ஒன்றில் கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரிடமிருந்து மேலும் 533 ஊழியர்களுக்குக் வைரஸ் பரவியுள்ளது.
கானாவின் ஜனாதிபதி நானா அகுபோ அட்டோ இதனைத் தெரிவித்தார்.
ஆலையில் ஏற்பட்ட வைரஸ் பரவல் குறித்து சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டறிந்தனர். இருப்பினும், அங்கு வைஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.