முன்னாள் எம்.பி.காதர் மஸ்தான் சுயதனிமையில்
முன்னாள் எம்.பி. காதர் மஸ்தான் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோரை சுயதனிமையில் இருக்குமாறு சுகாதார மற்றும் காவல்துறையினர் இன்று அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி மன்னார் தாராபுரம் பகுதியில் மரண சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட புத்தளம் பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை.
தாராபுரம் பகுதி இன்று காலை முதல் ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.