நாளை முதல் வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை வர பயணத்தடை

இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியா நாடுகளின் பிரஜைகள் இலங்கை வர இரண்டு வாரங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை 14-ஆம் திகதி சனிக்கிழமை முதல் இந்தப் பயணத்தை தடை அமுலுக்கு வருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவா் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் தற்போது அதிகமாகவுள்ள இந்த நாடுகளில் இருந்து பயணிகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவில் அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால் இலங்கைக்கு வரும் சீனா்களுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை. சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் வரும்போதும் அதன் பின்னரும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதால் இந்தத் தடை தேவையற்றது என சந்திரசிறி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *