கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்ட தம்பதியினர் எல்லோருக்கும் குட் பை
நமக்கு இதுதான் கடைசி சந்திப்பு.. குட் பை” என்று கணவனும் மனைவியும் கண்ணீருடன் விடை பெறும் வீடியோ ஒன்று பலரின் இதயத்தை உருக வைத்துள்ளது.
சீனாவில் பிறந்த குழந்தை முதல் வயதானோர் வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்… பொதுவாக மிகப்பெரிய இழப்பு, சோகம் ஏற்படும்போதுதான் மனித உயிர்களின் மதிப்பீடுகளும் அதிகமாகும்.
அப்படித்தான் சீனாவில் ஒவ்வொரு மனிதனும் உயிரை காப்பாற்றி கொள்ளவும், அல்லது உயிருக்கு உயிரானவர்களை பிரிய மனமின்றி தவிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது.. வாழுகின்ற ஆசையில் துடித்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், எது தங்களுடைய கடைசி வினாடி என்று தெரியாத துர்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் பலரையும் தாக்கிய கரோனா வைரஸ், வயதான தம்பதி 2 பேரையும் கப்பென பிடித்து கொண்டது.. இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.. பக்கத்து பக்கத்து பெட்டில் படுக்க வைத்திருக்கிறார்கள். நன்கு பழுத்த ஜோடி இவர்கள்.. பல வருட காலம் பிணைப்புடன் அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள் போலும்.. ஐசியூ வார்டில் கனத்த இதயத்துடன் பிரியா விடை பெற்றக் கொள்கின்றனர்.
“இதுதான் நம் கடைசி சந்திப்பு, குட் பை’ என்று ஒருவருக்கொருவர் சொல்லி கொள்கிறார்கள். இது சம்பந்தமான வீடியோவை வெளியிட்ட நபர், “உண்மையான அன்புக்கு அர்த்தம் இதுதான்.. 80 வயது ஜோடி ஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற்று கொள்கின்றனர்.. ஒருவேளை இதுவே இவர்களின் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வேதனை வீடியோ பலரையும் கண்கலங்க செய்து வருகிறது.. கண்களில் நீர் வழிய… ஒருத்தருக்கொருத்தர் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டுள்ளதை பார்க்கும்போது, அவர்களின் ஆயிரம் தவிப்புகளை நம்மால் உணர முடிகிறது.. இதில் அந்த வயதான பெண் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறார்.. அவரால் கணவனுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை… மூச்சு திணறி கண்களில் இருந்து நீர் மட்டும் வழிந்தபடியே உள்ளது.
இந்த வீடியோவை பார்க்கும்போது, உண்மையான காதல் உள்ள இந்த தம்பதிகளை எந்த கோரமான கொரோனாவும் எதுவும் செய்துவிட கூடாதே என்று நமக்கு மனம் பதைபதைக்கிறது. ‘கணவன் – மனைவி என்றால் என்ன அர்த்தம்’ என்ற தலைப்பில், கண்ணீரால் “குட் பை” சொல்லிக் கொள்ளும் இந்த தம்பதியின் வீடியோதான் நம் இதயத்தை சுக்குநூறாக துளைத்து வேதனையில் ஆழ்த்தி வருகிறது!