அமெரிக்காவில் இந்து கோவில்மீது இனவெறித் தாக்குதல்!

அமெரிக்காவின் லூயிஸ்வில்லே நகரில் சாமிநாராயணன் கோவில் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே நகரில் சாமிநாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மர்ம ஆசாமிகள் சிலர் கோவிலை சூறையாடினர். கோவிலின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் பூசினர்.
மேலும் அந்த மர்ம ஆசாமிகள் கோவில் வளாகத்துக்குள் உள்ள நாற்காலியில் கத்தி ஒன்றை குத்தி வைத்துவிட்டு சென்றனர். இந்து கோவில் அவமதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்க வாழ் இந்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக லூயிஸ்வில்லே நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *