மைத்திரிபாலவைச் சந்தித்தார் புதிய தளபதி சவேந்திர சில்வா!
இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.
அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதியைச் சந்திக்கும் சம்பிரதாயத்தின்படி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.