தெரிவுக்குழுவில் மீளவும் முன்னிலையாகும் பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை இவர்களைத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைத் தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.