தெரிவுக்குழு முன் நாளை ரிஷாத், மகேஷ் சாட்சியம்!
உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாளை புதன்கிழமை மீண்டும் கூடுகின்றது.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க நாளை அழைக்கப்பட்டுள்ளனர்.