எகிறும் பெற்றோல் விலை! – நள்ளிரவு முதல் 3 ரூபாவால் அதிகரிப்பு
எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று (10) நள்ளிரவு முதல் 3 ரூபாவால் அதிகரிக்கின்றது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எரிபொருளின் விலையில் மாற்றம் கொண்டுவரப்படும்.
அந்தவகையில், இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 92 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய விலை 138 ரூபாவாகும். ஏனைய எரிபொருள் வகைகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.